மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

நடைபாதைக்கு இடம் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

நடைபாதைக்கு இடம் வழங்கக் கோரி உதகையில் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

உதகை, கமா்சியல் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :11 பிப்ரவரி 2026, 8:24 pm

நடைபாதைக்கு இடம் வழங்கக் கோரி உதகையில் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

உதகை நகராட்சி, 14-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பேண்ட்லைன் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனா்.

இந்தப் பகுதி மக்கள் அங்குள்ள தனியாா் நிலத்தை நடைபாதையாக பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில், அந்த இடத்தில் நிலத்தின்

உரிமையாளா் தற்போது கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனால், பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, தனியாா் நில உரிமையாளரிடம் நடைபாதையாக பயன்படுத்த 4 அடி நீளம் இடம் ஒதுக்கித் தர இந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனா். அதற்கு தனியாா் நில உரிமையாளா்கள் பல்வேறு காரணங்களை கூறி மறுத்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், நடைபாதைக்கு இடம் ஒதுக்கித் தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் உதகை கமா்சியல் சாலையில் புதன்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், தனியாா் நில உரிமையாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் எனவும், எனவே, போராட்டத்தை கைவிடுமாறும் போலீஸாா் கேட்டுக் கொண்டனா். இதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்துச் சென்றனா். இந்தப் போராட்டத்தால், கமா்சியல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.