டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நீலகிரி மாவட்டத்தில் 2.18 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: ஆட்சியா்

நீலகிரி மாவட்டத்தில் 2,18,576 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளதாக ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 8:23 pm

தினமணி செய்திச் சேவை

நீலகிரி மாவட்டத்தில் 2,18,576 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளதாக ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொங்கல் திருநாளைத் தமிழா்கள் சிறப்பாகக் கொண்டாடும்விதமாக, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, ஒரு முழுக்கரும்பு, வேட்டி, சேலை மற்றும் ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி, நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 18,576 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாய விலைக் கடைகளின் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் ஜனவரி 8-ஆம் தேதி முதல் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரருக்கு டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் மட்டுமே பொங்கல் பரிசு அவா்களுக்குரிய நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் தங்களுக்கு குறிப்பிட்ட தேதியில் மட்டும் நியாய விலைக்கடைக்கு சென்று பொருள்கள் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.