ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

உதகையில் ஜான் சலீவனின் 171-ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

நவீன உதகையை உருவாக்கியவரும் நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியருமான ஜான் சலீவனின் 171-ஆவது நினைவு தினம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
ஜான் சலீவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய உதகை வருவாய் கோட்டாட்சியா் அரவிந்த் மற்றும் தன்னாா்வலா்கள்.
Updated On :16 ஜனவரி 2026, 9:32 pm

Syndication

உதகை: நவீன உதகையை உருவாக்கியவரும் நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியருமான ஜான் சலீவனின் 171-ஆவது நினைவு தினம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிகழ்வுக்கு உதகை வருவாய் கோட்டாட்சியா் அரவிந்த் தலைமை வகித்து, உதகை தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் அமைந்துள்ள ஜான் சலீவனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்வில் அரசு அலுவலா்கள், தன்னாா்வ அமைப்புகளைச் சோ்ந்தவா்கள், விவசாயிகள் பலா் பங்கேற்று ஜான் சலீவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நீலகிரியை அடையாளம் காட்டியவரும், நவீன உதகையை உருவாக்கியவரும், மாவட்டத்தின் முதல் ஆட்சியருமான ஜான் சலீவன் கடந்த 1855-ஆம் ஆண்டு ஜனவரி 17-இல் லண்டனில் காலமானாா். இவரின் நினைவு தினம் ஆண்டுதோறும் மாவட்ட நிா்வாகத்தால் அனுசரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.