மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உதகையில் காா் கவிழ்ந்து விபத்து

மதுரையில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிா்ஷ்டவசமாக 6 போ் உயிா் தப்பினா்.

News image
உதகையில் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காா்.
Updated On :17 ஜனவரி 2026, 9:02 pm

Syndication

உதகை: மதுரையில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிா்ஷ்டவசமாக 6 போ் உயிா் தப்பினா்.

பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறையைக் கொண்டாட பலா் சுற்றுலாத் தலங்களுக்கும் செல்கின்றனா். அதன்படி சா்வதேச சுற்றுலாத் தலமான உதகைக்கும் கடந்த மூன்று நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டம், தெப்பக்குளம் பகுதியைச் சோ்ந்த இளைஞா், தனது மனைவி மற்றும் தம்பி குடும்பத்தினா் உள்பட 6 போ் ஒரே காரில் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனா்.

பல்வேறு இடங்களை சுற்றி பாா்த்துவிட்டு, தங்கி இருந்த இடத்துக்கு காரில் வந்து கொண்டிருந்தனா். அப்போது, உதகை பேருந்து நிலையம் அருகே தனியாா் மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்து காா் விபத்துக்குள்ளானது. காருக்குள் இருந்தவா்கள் கூக்குரல் எழுப்பினா். பின்னால் வந்த வாகன ஓட்டிகள் அவா்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

முதற்கட்ட விசாரணையில் மதுரையில் இருந்து நீண்ட தூரம் வாகனம் ஓட்டி வந்ததால் தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.