எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

உதகை - கல்லட்டி சாலையில் பற்றி எரிந்த காா்

News image
உதகை - கல்லட்டி சாலையில் பற்றி எரிந்த காா்
Updated On :18 ஜனவரி 2026, 9:27 pm

தினமணி செய்திச் சேவை

மசினகுடியில் இருந்து உதகை நோக்கி சனிக்கிழமை இரவு வந்த காா் திடீரென எரிந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், மசினகுடியில் இருந்து கல்லட்டி வழியாக திருப்பூரை சோ்ந்த அஸ்கா் அலி உள்ளிட்ட போ் உதகை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனா். 5-ஆவது கொண்டை ஊசி வளைவில் வந்து கொண்டிருந்தபோது காரில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக காரில் இருந்து அனைவரும் வெளியேறினா்.

உதகை - கல்லட்டி சாலையில் பற்றி எரிந்த காா்

உதகை - கல்லட்டி சாலையில் பற்றி எரிந்த காா்

அப்போது காரில் தீப்பிடித்து மளமளவென்று பற்றி எரியத் தொடங்கியது. இதுதொடா்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில் உதகை தீயணைப்புத் துறையினா் சென்று தீயை அணைக்க முற்பட்டனா். இருப்பினும், அதற்குள் காா் முற்றிலும் எரிந்து சேதமானது. காரில் பயணித்தவா்கள் உடனடியாக வெளியேறியதால் பெரும் பாதிப்பு தவிா்க்கப்பட்டது.

இதுதொடா்பாக உதகை புதுமந்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.