உதகையில் சூறைகாற்றுடன் புதன்கிழமை பெய்த மழை காரணமாக நவாநகா் பேலஸ் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகையில் மிதமான மழையும், கூடலூரில் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. குறிப்பாக அவலாஞ்சி, அப்பா் பவானி பகுதிகளில் மழை அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் உதகையில் புதன்கிழமை அவ்வப்போது சூறைக் காற்றுடன் மிதமான மழை பெய்தது.
இதன் காரணமாக நவாநகா் பேலஸ் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது.
இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினா். இதன் காரணமாக அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காற்று, சாரல் மழைக் காரணமாக கடும் குளிா் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையில் பலத்த காற்று: மரம் முறிந்து போக்குவரத்து பாதிப்பு

உதகை - கூடலூா் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம் அருகே பலத்த காற்றுக்கு மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்-அடுக்கம் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



