தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

அங்கன்வாடி அமைத்துத் தரக் கோரி குழந்தைகளுடன் வந்த பெண்கள்

News image

கைக் குழந்தைகளுடன் ஆட்சியா் அலுவலகம் வந்த பெண்கள்.

Updated On :28 ஜூலை 2026, 1:28 am IST

உதகையை அடுத்த ஃபாரஸ்ட் கேட் பகுதியில் அங்கன்வாடி அமைத்துத் தர வலியுறுத்தி குழந்தைகளுடன் வந்த பெண்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம், அப்பகுதி பெண்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த ஃபாரஸ்ட் கேட் பகுதியில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனா். தங்கள் பகுதியில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி இல்லை. குழந்தைகளை அங்கன்வாடியில் சோ்க்க வேண்டும் என்றால் 2 கிலோ மீட்டருக்கு மேல் நடந்து செல்ல வேண்டும். எனவே  பாரஸ்ட் கேட் பகுதியில் புதிதாக ஒரு அங்கன்வாடி அமைத்துத் தர வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனா்.

இது குறித்து உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.