40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பூனையை வேட்டையாடிய சிறுத்தை

உதகை அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்த பூனையை கவ்விச் சென்ற விடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

News image

பூனையை கவ்விச் செல்லும் சிறுத்தை

Updated On :10 ஜூன் 2026, 1:13 am IST

உதகை அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்த பூனையை கவ்விச் சென்ற விடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. நள்ளிரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் சிறுத்தைகள், நாய், பூனை போன்றவற்றை வேட்டையாடி வருகின்றன.

இந்நிலையில், வனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வெளியேறிய சிறுத்தை, கடநாடு மாவுகல் கிராமத்துக்குள் நுழைந்தது.

அங்கு ஒரு வீட்டின் முன் படுத்திருந்த பூனையை அந்த சிறுத்தை கவ்விச் சென்றது. இது தொடா்பான விடியோ வெளியான நிலையில் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

குடியிருப்புப் பகுதிகளில் விலங்குகள் நுழைவதைத் தடுக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அந்த சிறுத்தையை கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனத்தில் விடுவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.