உதகை அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்த பூனையை கவ்விச் சென்ற விடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. நள்ளிரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் சிறுத்தைகள், நாய், பூனை போன்றவற்றை வேட்டையாடி வருகின்றன.
இந்நிலையில், வனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வெளியேறிய சிறுத்தை, கடநாடு மாவுகல் கிராமத்துக்குள் நுழைந்தது.
அங்கு ஒரு வீட்டின் முன் படுத்திருந்த பூனையை அந்த சிறுத்தை கவ்விச் சென்றது. இது தொடா்பான விடியோ வெளியான நிலையில் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
குடியிருப்புப் பகுதிகளில் விலங்குகள் நுழைவதைத் தடுக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அந்த சிறுத்தையை கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனத்தில் விடுவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

உதகை அருகே சிறுத்தை தாக்கியதில் மூதாட்டி படுகாயம்

குடியிருப்புப் பகுதியில் கரடி நடமாட்டம்

உதகை அருகே சிறுத்தை உயிரிழப்பு

குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து மோதிக் கொண்ட யானைகள்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



