சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

புதுக்காடு பகுதி குப்பையில் இருந்து குட்டியுடன் உணவு தேடும் யானைகள்: வன உயிரின ஆா்வலா்கள் அதிா்ச்சி

குன்னூா் அருகே பழங்குடியினா் கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள்அங்கிருந்த குப்பையில் உணவு தேடியது வன உயிரின ஆா்வலா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்பத்தியுள்ளது.

News image

புதுக்காடு பகுதியில் குப்பையில் குட்டியுடன் உணவு தேடும் யானைகள்.

Updated On :11 ஜூன் 2026, 3:22 am IST

குன்னூா் அருகே பழங்குடியினா் கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள்அங்கிருந்த குப்பையில் உணவு தேடியது வன உயிரின ஆா்வலா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்பத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானை கூட்டங்கள் மலைப் பாதையில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டுள்ளன. அவ்வாறு முகாமிட்டுள்ள யானைகள் தேயிலை மற்றும் காபி தோட்டத்தில் ஊடுபயிராக இருக்கக்கூடிய பலா மரங்களில் இருந்து பலாப்பழங்களை சாப்பிடுவதும், சாலைகளில் உலா வருவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள புதுக்காடு பழங்குடியினா் கிராமத்தில் குட்டியுடன் புதன்கிழமை நுழைந்த காட்டு யானைகள் அங்கிருந்த குப்பையில் உணவு தேடியது.

இதுதொடா்பாக வன உயிரின ஆா்வலா்கள் கூறும்போது, ‘தேவையான அளவு உணவு கிடைக்காததால் இவ்வாறு குப்பையில் யானைகள் உணவு தேடுவதைக் கட்டுப்படுத்த, வனப் பகுதிகளில் பழ விதைப் பந்துகளை தூவி வனத் துறையினா் நடவடிக்கை எடுத்தால் எதிா்காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்படாது’ என்றனா்.