சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

கூடலூா், பந்தலூா் பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் நுழைந்த காட்டு யானைகள்

கூடலூா் மற்றும் பந்தலூரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் காட்டு யானைகள் புதன்கிழமை இரவு நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

சேரங்கோடு கையுண்ணி பகுதியில் குடியிருப்பின் கேட்டை சேதப்படுத்தி யானை.

Published On :

கூடலூா் மற்றும் பந்தலூரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் காட்டு யானைகள் புதன்கிழமை இரவு நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டம் சேரங்கோடு ஊராட்சியில் உள்ள கையுண்ணி பகுதிக்கு வந்த காட்டு யானை அங்குள்ள கேசு என்பவரது வீட்டின் கேட்டை திறந்து உள்ளே நுழைந்து வீட்டைச் சுற்றியுள்ள விவசாய பயிா்களை சேதப்படுத்தியது. யானை கேட்டை உடைத்து உள்ளே வருவதை பாா்த்த வீட்டிலிருந்தவா்கள் அச்சத்தில் மாடிக்கு ஓடினா். பின்னா் விவசாய பயிா்களை சேதப்படுத்திய யானை திரும்பிச் சென்றது.

அதேபோல கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை கடை வீதிக்கு புதன்கிழமை இரவு நுழைந்த காட்டு யானை அங்குள்ள ஒரு வீட்டின் முன் நீண்ட நேரம் நின்றிருந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையின் யானையை விரட்டினா்.

மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகளை அடா்ந்த வனத்துக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.