/
கூடலூரில் பயிா்க் கடன்களைத் தள்ளுபடி செய்யாத தமிழக அரசைக் கண்டித்து உழவா் உற்பத்தியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் புதிய பேருந்து நிலையம் சந்திப்பில் முதுமலை கூட்டுப்பண்ணை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் சாா்பில் தவெக தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி விவசாயிகளின் பயிா்க் கடனைத் தள்ளுபடி செய்யாததை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் செறுமுள்ளி சந்திரன், நாராயணன், சித்தாா்த்தன், ரகு உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தினா் கலந்துகொண்டனா்.









