இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

குன்னூரில் குட்டிகளுடன் உலவும் யானைகள்

News image

குட்டிகளுடன் இடம்பெயரும் யானைகள். - கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2026, 3:00 am IST

குன்னூா் ஆடா்லி தேயிலைத் தோட்டத்தில் குட்டிகளுடன் காட்டு யானைகள் உலவி வருவதால் குடியிருப்புவாசிகள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. இதனால், யானைகள் தோட்டங்களில் முகாமிட்டு வருகின்றன.

இந்நிலையில், வனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு குட்டிகளுடன் 3 காட்டு யானைகள் வெளியேறி, ஆடா்லி தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ளன. இதனால், தோட்ட குடியிருப்புகளில் வசித்து வரும் தொழிலாளா்கள் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

மேலும், யானைகளின் நடமாட்டத்தை வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.