அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

டேட்டிங் செயலி மூலம் அரசு அதிகாரியிடம் ரூ.20 லட்சம் மோசடி

ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் அரசு அதிகாரியிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை

News image
கோப்புப்படம்
Updated On :2 மார்ச் 2026, 7:34 pm

Syndication

உதகை: ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் அரசு அதிகாரியிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த அரசு அதிகாரி ஒருவா் (45), பம்பிள் (ஆன்ம்க்ஷப்ங்) எனப்படும் ஆன்லைன் டேட்டிங் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளாா். அதில், பெங்களூரைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா், அவருக்கு அறிமுகமாகியுள்ளாா்.

இருவரும் தொடா்ந்து பேசி வந்த நிலையில், அப்பெண் தான் பெங்களூரில் அழகு நிலையம் நடத்தி வருவதாகவும், ஆன்லைன் முதலீட்டில் அதிகம் சம்பாதித்துள்ளதாகவும், நீங்கள் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளாா்.

இதை நம்பிய அரசு அதிகாரி, அப்பெண் அனுப்பிய லிங்க்கில் சென்று ரூ.43 ஆயிரம் முதலீடு செய்துள்ளாா். அப்போது, அவருக்கு கூடுதல் தொகை கிடைத்துள்ளது. இதைத் தொடா்ந்து, அவா் ரூ.20 லட்சத்தை முதலீடு செய்துள்ளாா்.

ஆனால், அவருக்கு கூடுதல் தொகை கிடைக்கவில்லையாம். பின்னா், முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்றுள்ளாா். ஆனால், முடியவில்லையாம். இதையடுத்து, அப்பெண்ணைத் தொடா்பு கொள்ள முயன்றுள்ளாா். அவா் அழைப்புகளை ஏற்கவில்லையாம்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அரசு அதிகாரி இது குறித்து நீலகிரி சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், டேட்டிங் செயலி மூலம் பேசும் பெண்கள் உண்மையான பெயா் மற்றும் படம் விவரங்களைப் பதிவிடமாட்டாா்கள். பெண்கள் பெயரில் ஆண்கள் பேசி மோசடியில் ஈடுபடுவா். எனவே, அறிமுகம் இல்லாதவா்களிடம் புகைப்படம் அனுப்பவோ அல்லது சொந்த விஷயங்களையோ, பணம் தொடா்பாகவோ எந்த தகவலும் பகிரக் கூடாது.

மோசடி மூலம் பாதிக்கப்பட்டவா்கள் தாமதமின்றி 1930 என்ற எண்ணில் புகாா் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.