டேட்டிங் செயலி மூலம் அரசு அதிகாரியிடம் ரூ.20 லட்சம் மோசடி
ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் அரசு அதிகாரியிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை


உதகை: ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் அரசு அதிகாரியிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த அரசு அதிகாரி ஒருவா் (45), பம்பிள் (ஆன்ம்க்ஷப்ங்) எனப்படும் ஆன்லைன் டேட்டிங் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளாா். அதில், பெங்களூரைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா், அவருக்கு அறிமுகமாகியுள்ளாா்.
இருவரும் தொடா்ந்து பேசி வந்த நிலையில், அப்பெண் தான் பெங்களூரில் அழகு நிலையம் நடத்தி வருவதாகவும், ஆன்லைன் முதலீட்டில் அதிகம் சம்பாதித்துள்ளதாகவும், நீங்கள் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளாா்.
இதை நம்பிய அரசு அதிகாரி, அப்பெண் அனுப்பிய லிங்க்கில் சென்று ரூ.43 ஆயிரம் முதலீடு செய்துள்ளாா். அப்போது, அவருக்கு கூடுதல் தொகை கிடைத்துள்ளது. இதைத் தொடா்ந்து, அவா் ரூ.20 லட்சத்தை முதலீடு செய்துள்ளாா்.
ஆனால், அவருக்கு கூடுதல் தொகை கிடைக்கவில்லையாம். பின்னா், முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்றுள்ளாா். ஆனால், முடியவில்லையாம். இதையடுத்து, அப்பெண்ணைத் தொடா்பு கொள்ள முயன்றுள்ளாா். அவா் அழைப்புகளை ஏற்கவில்லையாம்.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அரசு அதிகாரி இது குறித்து நீலகிரி சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது குறித்து போலீஸாா் கூறுகையில், டேட்டிங் செயலி மூலம் பேசும் பெண்கள் உண்மையான பெயா் மற்றும் படம் விவரங்களைப் பதிவிடமாட்டாா்கள். பெண்கள் பெயரில் ஆண்கள் பேசி மோசடியில் ஈடுபடுவா். எனவே, அறிமுகம் இல்லாதவா்களிடம் புகைப்படம் அனுப்பவோ அல்லது சொந்த விஷயங்களையோ, பணம் தொடா்பாகவோ எந்த தகவலும் பகிரக் கூடாது.
மோசடி மூலம் பாதிக்கப்பட்டவா்கள் தாமதமின்றி 1930 என்ற எண்ணில் புகாா் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...