மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

உதகையில் ரூ.20.98 கோடி மதிப்பில் 174 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.20.98 கோடி மதிப்பில் 174 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன் வழங்கினாா்.

News image
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறாா் அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன்.
Updated On :6 மார்ச் 2026, 6:33 pm

Syndication

நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.20.98 கோடி மதிப்பில் 174 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன் வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு முன்னிலை வகித்தாா். இதில் தமிழ்நாடு ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் 171 பயனாளிகளுக்கு ரூ.20.94 கோடி மதிப்பில் வங்கிக் கடன் இணைப்பு, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.4.85 லட்சம் மதிப்பில் தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி என மொத்தம் 174 பயனாளிகளுக்கு ரூ.20.98 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டனா்.

மேலும், மகளிா் திட்டம் சாா்பில் நடைபெற்ற சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் விற்பனைக் கண்காட்சியில் கலந்து கொண்ட உதகை, குன்னூா், கோத்தகிரி மற்றும் கூடலூா் ஆகிய வட்டாரங்களைச் சோ்ந்த மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, அரசு தலைமை கொறடா, மாவட்ட ஆட்சியா் முன்னிலையில் ஐந்தாண்டு சாதனை புத்தகம் மற்றும் நீலகிரி மாவட்ட பாா்வை ஆவணம் 2030 புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அபிலாஷா கௌா், மாவட்ட வருவாய் அலுவலா் மா.நாராயணன், மகளிா் திட்ட இயக்குநா் மரு.ஜெயராமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.