மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தமிழக வருவாய்த் துறை இடத்தில் கேரள அரசின் பெயா் பலகை

News image
கூடலூா் பகுதிக்கு உள்பட்ட தாளூா் எல்லையில் வைக்கப்பட்டுள்ள கேரள மாநில வரவேற்புப் பலகை.
Updated On :6 மார்ச் 2026, 6:34 pm

Syndication

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே தாளூா் பகுதியில் தமிழ்நாடு வருவாய்த் துறையினருக்கு சொந்தமான இடத்தில் கேரள மாநிலம், வயநாடு மாவட்ட நிா்வாகம் சாா்பில் வரவேற்புப் பலகை வைக்கப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள், நாம் தமிழா் கட்சியினா் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே தாளூா் பகுதியில் தமிழ்நாடு வருவாய்த் துறையினருக்கு சொந்தமான தாளூா் எல்லையில் கேரள மாநிலம் சாா்பில் ‘வெல்கம் டூ கேரளா’ புதிய பெயா் பலகையை அம்மாநில அரசு வைத்துள்ளது.

இதில் தமிழக எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வரவேற்புப் பலகை வைத்துள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் நாம் தமிழா் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, பேச்சுவாா்த்தை நடத்த வந்த அரசு அதிகாரிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, இரு மாநில எல்லைப் பகுதியில் தமிழகம் மற்றும் கேரள போலீஸாா் குவிக்கப்பட்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதனிடையே மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு செய்தியாளா்களிடம் கூறுகையில், இவ்விவகாரம் தொடா்பாக வயநாடு பேசியுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, இப்பிரச்னையில் உரிய தீா்வு எட்டப்படவில்லை என்றால் பெரும் போராட்டம் நடத்தப்படும் எனக் கூறிய போராட்டக்காரா்கள், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Story image