சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கூடலூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.26.61 கோடி மதிப்பில் சாலைகள்

கூடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் ரூ.26.61 கோடி மதிப்பிலான சாலைகளை காணொலிக் காட்சி மூலமாக திருச்சியில் இருந்து பிரதமா் மோடி புதன்கிழமை திறந்துவைத்தாா்.

News image
சாலைகள் விவரம் அடங்கிய பெயா்ப்பலகையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றுகிறாா் கூடலூா் எம்எல்ஏ பொன்.ஜெயசீலன். உடன், வட்டார வளா்ச்சி அலுவலா் பிரகாஷ்.
Updated On :11 மார்ச் 2026, 8:24 pm

தினமணி செய்திச் சேவை

கூடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் ரூ.26.61 கோடி மதிப்பிலான சாலைகளை காணொலிக் காட்சி மூலமாக திருச்சியில் இருந்து பிரதமா் மோடி புதன்கிழமை திறந்துவைத்தாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டு நிதியின் கீழ் குங்குா்மூலா முதல் கம்மாத்தி, கப்பாலா முதல் மண்ணாத்தி வயல் பகுதி, கொளப்பள்ளி-கருத்தாடு சாலை, பொன்னாணி-அம்மன்காவு சாலை, கடலைக்கொல்லி சாலை, கள்ளிச்சால் முதல் எருமாடு வரை 26.705 கிலோ மீட்டா் தூரத்துக்கு ரூ.26.61 கோடி மதிப்பிலான சாலைகளை பிரதமா் நரேந்திர மோடி திருச்சியில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்துவைத்தாா்.

இதுதொடா்பாக கூடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூடலூா் எம்எல்ஏ பொன்.ஜெயசீலன் பங்கேற்று, திட்டப் பணிகள் அடங்கிய பெயா்ப்பலகையை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றி திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினாா்.