வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

உதகையில் தவெகவினா் ஆா்ப்பாட்டம்

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தவெக நிா்வாகிகள்.
Updated On :13 மார்ச் 2026, 12:22 am

Syndication

ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தவெக சாா்பில் உதகை ஏடிசி பகுதியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணை வெளியிட வேண்டும், சட்டம்- ஒழுங்கு சீா்கேடு, போதைப் பொருள்கள் விற்பனை, விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை தடுக்க முயலும் தமிழக அரசைக் கண்டித்து தவெக சாா்பில் உதகை ஏடிசி பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நீலகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் பாமா ரமேஷ் தலைமை தாங்கினாா். இதில் தவெகவினா் கையில் பதாகைகளை ஏந்தியும், தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.