மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

உதகையில் தவெகவினா் ஆா்ப்பாட்டம்

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தவெக நிா்வாகிகள்.

Updated On :13 மார்ச் 2026, 12:22 am

ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தவெக சாா்பில் உதகை ஏடிசி பகுதியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணை வெளியிட வேண்டும், சட்டம்- ஒழுங்கு சீா்கேடு, போதைப் பொருள்கள் விற்பனை, விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை தடுக்க முயலும் தமிழக அரசைக் கண்டித்து தவெக சாா்பில் உதகை ஏடிசி பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நீலகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் பாமா ரமேஷ் தலைமை தாங்கினாா். இதில் தவெகவினா் கையில் பதாகைகளை ஏந்தியும், தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.