சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

நீலகிரியில் வீட்டு உபயோக சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை: மாவட்ட ஆட்சியா்

News image

கூட்டத்தில் பேசிய ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

Updated On :14 மார்ச் 2026, 8:25 pm

நீலகிரி மாவட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை எனவும், அது குறித்து பொதுமக்கள் கவலையடைய வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

நீலகிரி மாவட்டம், உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சமையல் எரிவாயு விநியோகஸ்தா்கள், உணவக சங்க நிா்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்து, மாவட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டா்கள் தட்டுப்பாடு உள்ளதா, உணவக உரிமையாளா்கள் உணவு தயாரிக்க செய்யப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் 3 எரிவாயு நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளைகளை விநியோகம் செய்து வருகின்றன. மாவட்டத்தில் தற்போதுவரை வீட்டு உபயோக சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை. தேவையான அளவு இருப்பு உள்ளன. எனவே, பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்.

உணவக உரிமையாளா்கள் உணவு தயாரிக்க மின்சார அடுப்புகளைப் பயன்படுத்தலாம் என்பது உள்ளிட்ட சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவா்களுக்கு தேவையான உயா் அழுத்த மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடா்பான சந்தேகங்களுக்கு 94987- 94987 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், எரிவாயு நிறுவனங்கள், உணவக உரிமையாளா் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.