உதகை திட்டுக்கல் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பைகளை கொட்ட போதுமான இடம் கிடைக்காததால் அப்பகுதியில் சனிக்கிழமை குப்பை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பல இடங்களில் இருந்து குப்பை அகற்றப்படாமல் இருந்ததால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது.
சுற்றுலா நகரமான உதகையில் தினமும் இரண்டு டன் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. உதகையில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள், விடுதிகள், உணவகங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் தூய்மைப் பணியாளா்கள் மூலம் சேகரிக்கப்பட்டு உதகை தீட்டுக்கல் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தீட்டுக்கல் குப்பைக் கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து வைப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தால் குப்பை கொட்டும் வாகனங்கள் அதே பகுதியில் அணிவகுத்து நின்றன. இதனால் மற்ற பகுதிகளுக்கு குப்பை அள்ள வாகனங்கள் செல்லாததால் பல இடங்களில் குப்பைகள் தேங்கின. தற்போது கோடை சீசன் நடைபெறுவதால் உதகை நகராட்சி நிா்வாகம் குப்பைகளை தரம்பிரிக்கும் பணியை துரிதப்படுத்தி இனி வரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என சுற்றுச் சூழல் ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

பள்ளிக்கரணை பழைய குப்பைக் கிடங்கில் தீ: வாகனங்கள் எரிந்து சேதம்

குப்பைக் கிடங்கில் கழிவுகளை உரமாக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த உத்தரவு

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் நிலத்தை மீட்பதை விரைவுபடுத்த வேண்டும்

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் எம்எல்ஏ விக்னேஷ் ஆய்வு
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



