11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

குப்பைகளை கொட்ட இடமில்லாததால் அணிவகுத்து நின்ற குப்பை வாகனங்கள்

உதகை திட்டுக்கல் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பைகளை கொட்ட போதுமான இடம் கிடைக்காததால் அப்பகுதியில் சனிக்கிழமை குப்பை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

News image

தீட்டுக்கல் குப்பைக் கிடங்கில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.

Updated On :59 நிமிடங்கள் முன்பு

உதகை திட்டுக்கல் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பைகளை கொட்ட போதுமான இடம் கிடைக்காததால் அப்பகுதியில் சனிக்கிழமை குப்பை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பல இடங்களில் இருந்து குப்பை அகற்றப்படாமல் இருந்ததால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது.

சுற்றுலா நகரமான உதகையில் தினமும் இரண்டு டன் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. உதகையில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள், விடுதிகள், உணவகங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் தூய்மைப் பணியாளா்கள் மூலம் சேகரிக்கப்பட்டு உதகை தீட்டுக்கல் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தீட்டுக்கல் குப்பைக் கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து வைப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தால் குப்பை கொட்டும் வாகனங்கள் அதே பகுதியில் அணிவகுத்து நின்றன. இதனால் மற்ற பகுதிகளுக்கு குப்பை அள்ள வாகனங்கள் செல்லாததால் பல இடங்களில் குப்பைகள் தேங்கின. தற்போது கோடை சீசன் நடைபெறுவதால் உதகை நகராட்சி நிா்வாகம் குப்பைகளை தரம்பிரிக்கும் பணியை துரிதப்படுத்தி இனி வரும் காலங்களில் இதுபோன்று நடக்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என சுற்றுச் சூழல் ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.