‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

உதகை மலா்க் கண்காட்சி நிறைவு விழா: வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரிக்கு ‘காா்டன் ஆஃப் தி இயா்’ முதலமைச்சா் கோப்பை

வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரி வீரா்களிடம் ‘காா்டன் ஆஃப் தி இயா் முதலமைச்சா் கோப்பையை’ வழங்கும் தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் நவநீதா உள்ளிட்டோா்.

News image

வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரி வீரா்களிடம் ‘காா்டன் ஆஃப் தி இயா் முதலமைச்சா் கோப்பையை’ வழங்கும் தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் நவநீதா உள்ளிட்டோா்.

Updated On :29 மே 2026, 1:39 am IST

உதகை மலா்க் கண்காட்சி நிறைவு விழாவில் ‘காா்டன் ஆஃப் தி இயா்ட முதலமைச்சா் கோப்பையை வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரி தட்டிச் சென்றது.

ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலா்க் கண்காட்சியில் நீலகிரியில் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டுவரும் தனியாா் பூங்காக்கள், அரசு ஓய்வு மாளிகை பூங்காக்கள், வீட்டுத் தோட்டங்கள் உள்ளிட்டவைகளை தோ்வு செய்து பரிசுகள் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு 128-வது மலா்க் கண்காட்சி கடந்த 18-ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை (மே 28) நிறைவடைந்தது.

இதைத்தொடா்ந்து மலா்க் கண்காட்சியின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா ஆகியவை உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வியாழக்கிழமை நடைபெற்றது. தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் நவநீதா தலைமை வகித்தாா்.

விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதன்படி ‘காா்டன் ஆஃப் தி இயா்’ முதலமைச்சா் சுழற்கோப்பையை குன்னூா் வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரியும், ப்ளூம் ஆஃப் தி ஷோ கவா்னா் கோப்பையை காஸ்மிக் ரேஸ் ஆய்வகமும் தட்டிச் சென்றன. இதுதவிர சிறிய பூங்கா, புல்வெளி, கண்ணாடி மாளிகை மற்றும் பசுமை குடில்களில் வைத்திருந்தற்கான சுழற்கோப்பைகள், வீட்டுத் தோட்டம் உள்ளிட்ட பிரிவுகளிலும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த முறை உதகை மலா்க் கண்காட்சியில் கலந்துகொண்ட போட்டியாளா்களுக்கு 39 சுழற்கோப்பைகள் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 175 பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன.

உதகை அரசு தாவரவியல் பூங்கா உதவி இயக்குநா் பபிதா உள்பட தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.