
குன்னூா் அருகே சாலை விபத்து முதியவா் உயிரிழப்பு

உயிரிழந்த ஹென்றி.
குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் நடைபெற்ற சாலை விபத்தில் முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
குன்னூா் ஆழ்வாா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஹென்றி (64). இவா் பிரவீன் என்பவரது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து கொண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூா் நோக்கி வந்து கொண்டிருந்தாா்.
மரப்பாலம் 11 வளைவில் இருசக்கர வாகனம் திரும்பும்போது, ஹென்றி வாகனத்தில் இருந்து தவறி சாலையில் விழுந்துள்ளாா். அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூா் நோக்கி வந்து கொண்டிருந்த லாரியின் சக்கரம் ஹென்றி மீது ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த குன்னூா் காவல் துறையினா் ஹென்றியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து குன்னூா் கெந்தளா பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் காா்த்திக் (30) என்பவா் மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





