இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

இருசக்கர வாகனம் திருட்டு: இளைஞருக்கு 6 மாதம் சிறை

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் இளைஞருக்கு 6 மாத கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:09 am

DIN

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் இளைஞருக்கு 6 மாத கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.
அவிநாசி,  ராயங்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன்(52). இவர், ஆட்டையாம்பாளையம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி  நிறுத்தி விட்டு நிறுத்தி சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வாகனத்தை காணவில்லை.
இதுகுறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக மதுரை,  அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் குமரன் (24) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அவிநாசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில்,  இருசக்கர வாகனம் திருடிய குமரனுக்கு, 6 மாத கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி  தீர்ப்பளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.