செங்கப்பள்ளியில் மனு நீதி முகாம்

செங்கப்பள்ளியில் நடைபெற்ற மனு நீதி முகாமில் 39 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Updated on
1 min read

செங்கப்பள்ளியில் நடைபெற்ற மனு நீதி முகாமில் 39 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டாட்சியரகத்துக்கு உள்பட்ட செங்கப்பள்ளியில் மனு நீதி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.  முகாமில் திருப்பூர் சார் ஆட்சியர் ஜெ.ஷ்ரவண்குமார்  தலைமை வகித்தார். ஊத்துக்குளி வட்டாட்சியர் அருணா முன்னிலை வகித்தார்.
மனு நீதி முகாமில் செங்கப்பள்ளி, அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு மனுக்களை அளித்தனர். இந்த முகாமில்,  14 பயனாளிகளுக்கு சலவைப்பெட்டி, 14 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை உள்பட 39 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com