‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

அமராவதி அணையில் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றம்

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து புதன்கிழமையும் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து புதன்கிழமையும் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்ட ங்களில் உள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்ததால் ஜூலை 16 ஆம் தேதி அணை முழுக் கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து அணையில் இருந்து உபரி நீரை வெளியேற்றபட்டது.  அப்போது தொடர்ந்து 13 நாள்கள் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் மேற்குத் தொடர்ச்சிமலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்தது.  இதனால் இரண்டாவது முறை அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், கேரள மாநிலம், மூணாறு பகுதியில் கடந்த சில நாள்களாக இடை விடாது கன மழை பெய்து வருகிறது. இதனால் அமராவதி அணைக்கு உள்வரத்தாக 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தது. இதனால் செவ்வாய்க்கிழமை அதிகபட்சம் அணையில் இருந்து 13 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டது. இது படிப்படியாக குறைக்கப்பட்டு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டது. இதனால் உடுமலை, தாராபுரம், கரூர் வரையில் அமராவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  இந்நிலையில் புதன்கிழமை தொடர்ந்து அணைக்கு உள்வரத்து அதிக அளவில் வந்து கொண்டிருந்ததால் ஆற்றின் மூலம் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. பொதுப் பணித்துறையினர் அணைப் பகுதியில் 24 மணி நேர கண்காணிப்பு பணிகளை மேற்கொ ண்டு வருகின்றனர்.                                                                  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.