விவசாய விளை பொருள்களுக்கு ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் உடுமலை வட்டார மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களில் தக்காளி அதிக அளவு உற்பத்தியாகும்போது விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தக்காளியை மதிப்புக் கூட்டும் பொருளாக மாற்றும் ஆலையைத் துவக்க வேண்டும். மேலும் குளிர்பதனக் கிடங்கையும் அமைக்க வேண்டும்.
மக்காச்சோள அறுவடை துவங்கியுள்ள நிலையில் அதை மார்க்கெட்டிங் கமிட்டி கிடங்குகளில் இருப்பு வைக்கும் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும்.
உடுமலை வட்டத்தில் எலையமுத்தூர், ஜல்லிபட்டி, தளி, சி.குமாரபாளையம், குறிச்சிக்கோட்டை ஆகிய கிராமங்களில் காட்டுப் பன்றிகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. எனவே வனத்துறை மூலம் காட்டுப் பன்றிகளை பிடிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் வி.சௌந்திரராஜன், கே.எஸ்.ரணதேவ் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம், கச்சா எண்ணெய் விலை சரிவால் ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

கடைசி டி20: இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள்!

மகன், மகளுடன் நடிகர் அஜித் குமார்!

அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம் இறுதியானதை வரவேற்கிறேன்: பிரதமர் மோடி
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


