தொழிலாளர் வைப்பு நிதி செலுத்தாத நூற்பாலை இயக்குநர்கள் மீது வழக்கு

தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த வைப்பு நிதியைச் செலுத்தாத நூற்பாலை இயக்குநர்கள் மீது தாராபுரம் காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Published on

தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த வைப்பு நிதியைச் செலுத்தாத நூற்பாலை இயக்குநர்கள் மீது தாராபுரம் காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தாராபுரம்- பொள்ளாச்சி சாலையில் தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களிடம் 2015 -ஆம் ஆண்டு தொழிலாளர் வைப்பு நிதி செலுத்துவதற்காக ஊதியத்திலிருந்து பணம் எடுக்கப்பட்டது. ஆனால், அந்த பணத்தை தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்துக்கு ஆலை இயக்குநர்கள் செலுத்தாமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இதுகுறித்து சேலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமலாக்கப் பிரிவு அதிகாரி ரமேஷ் பாபு, ஆலை நிர்வாகத்துக்கு பல முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் பயனில்லையாம். 
இதைத் தொடர்ந்து தொழிலாளர் வைப்பு நிதியை முறையாகச் செலுத்தாத ஆலை இயக்குநர்கள் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரி புகார் செய்தார். இதையடுத்து ஆலை நிர்வாக இயக்குநர்கள் ராஜலட்சுமி மற்றும் ரூபா ஆகியோர் மீது தாராபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தொழிலாளர் வைப்பு நிதி ரூ.10 லட்சத்து 21 ஆயிரம் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com