அவிநாசி அருகே கருமாபாளையத்தில் நாய்கள் துரத்திக் கடித்ததில் ஆண் புள்ளி மான் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
அவிநாசி அருகே கருமாபாளையம் ஊராட்சி தண்ணீர்பந்தல் முத்தம்மாள் நகர் காட்டு பகுதியில் நாய்கள் கடித்து குதறியதால் படுகாயமடைந்த 2 வயதுள்ள ஆண் புள்ளிமான் உயிரிழந்து கிடந்தது. அந்தப் புள்ளிமானைப் பார்த்த பொதுமக்கள், வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ விரைந்து இடத்துக்கு வந்து வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு மானை மீட்டனர். பிறகுஅவிநாசி கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனையை செய்து, அப்பகுதியில் அடக்கம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







