இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

வெள்ளக்கோவிலில் நூற்பாலையில் தீ விபத்து

வெள்ளக்கோவிலில் உள்ள ஒரு நூற்பாலையில் புதன்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் இயந்திரத்தின் சில பாகங்கள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமாயின.

Updated On :29 மார்ச் 2018, 3:15 am

வெள்ளக்கோவிலில் உள்ள ஒரு நூற்பாலையில் புதன்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் இயந்திரத்தின் சில பாகங்கள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமாயின.
  வெள்ளக்கோவில், குட்டக்காட்டுப்புதூரில் திருமூர்த்தி (45) என்பவருக்குச் சொந்தமான நூற்பாலை உள்ளது. இங்குள்ள புளோரூம் இயந்திரத்தில் புதன்கிழமை திடீரென தீப்பிடித்தது. மின் கசிவு காரணமாகத் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.
  தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் சி.தனசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.  தீ விபத்தில் இயந்திரத்தின் சில பாகங்கள், நூல் கோன்கள் எரிந்து சேதமடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.