ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

சொத்து வரி, குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து நகராட்சி அலுவலகம் முற்றுகை

வெள்ளக்கோவிலில் சொத்து வரி,  குடிநீர் கட்டண உயர்வைக் கண்டித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Updated On :13 பிப்ரவரி 2019, 7:52 am IST

வெள்ளக்கோவிலில் சொத்து வரி,  குடிநீர் கட்டண உயர்வைக் கண்டித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தீர்த்தாம்பாளையம், சிவநாதபுரம், சேரன் நகர், புதுக்காடு பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் நகராட்சி அலுவலகத்தில் திடீரென திரண்டனர். நகராட்சி ஆணையரைச் சந்தித்து மனுக் கொடுக்க வந்ததாகக் கூறிய அவர்கள் ஆணையர் இல்லாததால் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
வெள்ளக்கோவில் நகராட்சி தன்னிச்சையாக மிக அதிக அளவில் வரியினங்களை உயர்த்தி உள்ளது. கரூர், ஈரோடு மாநகராட்சிகள், காங்கயம் நகராட்சியைக் காட்டிலும் இங்கு வரி விதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு 50 ரூபாயாக இருந்த சொத்து வரி 2015ஆம் ஆண்டில் ரூ. 320, 2018 - 19 இல் ரூ. 500 என உயர்த்தப்பட்டுள்ளது.  2017இல் 780 ரூபாயாக இருந்த ஓராண்டுக்கான குடிநீர்க் கட்டணம் தற்போது 1,836 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சொத்து வரி, குடிநீர் கட்டண உயர்வு குறித்து முறைப்படி ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும். ஆனால், இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பாததால்  பலரும் 2018 - 19 ஆம் ஆண்டுக்கு பழைய கட்டணத்தையே செலுத்தி உள்ளனர்.
இந்நிலையில்,  தற்போது வரி கட்டியவர்கள், கட்டாதவர்கள் என அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொழில்கள் மிகவும் மந்தமாக இருக்கும் நிலையில் கூடுதல் கட்டணங்களைச் செலுத்த முடியாமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, உயர்த்தப்பட்ட கட்டணங்களைப் பழைய முறைப்படி குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.