மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

உடுமலையில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

உடுமலையில் பிளாஸ்டிக் பொருள்கள்செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On :23 ஜனவரி 2019, 9:44 am IST

உடுமலையில் பிளாஸ்டிக் பொருள்கள்செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
உடுமலையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் ஒருசில கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, நகராட்சி ஆணையாளர் ஓ.ராஜாராம் உத்தரவின்பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் நகரில் உள்ள கடைகளில் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனையிட்டனர். மத்திய பேருந்து நிலையம், பழனிப் பாதை, கல்பனா திரையரங்கு சாலை ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்பளர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து,  75 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.