தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

    சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 17 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Updated On :23 ஜனவரி 2019, 9:43 am IST

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (40). இவர், திருப்பூர் மாவட்டம்,  முத்தூர் அருகே அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் பாலகிருஷ்ணன், 2015  பிப்ரவரி 3 ஆம் தேதி அதே தொழிற்சாலையில் பணியாற்றி வரும் வடமாநிலத் தம்பதியின் 13 வயது சிறுமியை அழைத்துக் கொண்டு உடுமலையில் உள்ள தனது உறவினரான சின்னமாரிமுத்துவின் (38) வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் பாலகிருஷ்ணன், அவருக்கு உடந்தையாக இருந்த சின்னமாரிமுத்து ஆகிய இருவரையும் காங்கயம் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கானது திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி ஜெயந்தி செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கினார். 
பாலகிருஷ்ணனுக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 20 ஆயிரமும், சின்னமாரிமுத்துவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.