அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

    சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 17 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Updated On :23 ஜனவரி 2019, 9:43 am IST

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (40). இவர், திருப்பூர் மாவட்டம்,  முத்தூர் அருகே அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் பாலகிருஷ்ணன், 2015  பிப்ரவரி 3 ஆம் தேதி அதே தொழிற்சாலையில் பணியாற்றி வரும் வடமாநிலத் தம்பதியின் 13 வயது சிறுமியை அழைத்துக் கொண்டு உடுமலையில் உள்ள தனது உறவினரான சின்னமாரிமுத்துவின் (38) வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் பாலகிருஷ்ணன், அவருக்கு உடந்தையாக இருந்த சின்னமாரிமுத்து ஆகிய இருவரையும் காங்கயம் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கானது திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி ஜெயந்தி செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கினார். 
பாலகிருஷ்ணனுக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 20 ஆயிரமும், சின்னமாரிமுத்துவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.