வெள்ளக்கோவில் அருகே மர்ம நபர்களால் குடிநீர் குழாய் உடைப்பு

வெள்ளக்கோவில் அருகே மர்ம நபர்கள் குடிநீர் குழாயை உடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட குடிநீர் குழாய்
மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட குடிநீர் குழாய்

வெள்ளக்கோவில் அருகே மர்ம நபர்கள் குடிநீர் குழாயை உடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட  மயில்ரங்கத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 

இங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக தொட்டியிலிருந்து குழாய்கள் அமைத்து குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த பெண் ஊராட்சி தலைவராக இருந்து வருகிறார். 

இந்நிலையில் மயில்ரங்கத்தில் உள்ள குடிநீர் குழாயை திங்கள்கிழமை அதிகாலையில் பார்த்த போது மர்ம நபர்கள் உடைத்துச் சேதப்படுத்தி விட்டனர். இதனால் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அரசியல் காரணங்களுக்காக இச்சம்பவம் நடந்துள்ளது கூறப்படுகிறது. 

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com