திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, சிவன்மலை ஊராட்சிக்கு உள்பட்ட ராமபட்டிணம் பகுதியில் மின்கோபுரம் அமைந்துள்ள உள்ள விவசாய நிலத்தில் விவசாயிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், உயர்மின் கோபுரம் அமைந்துள்ள நிலத்திற்கு மாத வாடகை கொடுக்க வேண்டும், அரசாணை எண்:54 -ன் படி எண்ணெய், எரி காற்றுக் குழாய் திட்டங்களுக்கு இழப்பீடு நிர்ணயம் செய்தது போல, மின் திட்டங்களால் பாதிக்கப்படும் விளை நிலங்களுக்கும் அதே இழப்பீடு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்களை எழுப்பினர்.