நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாரதி பிறந்த நாள் விழா: சுயமுன்னேற்ற நூல் வெளியீடு

பாரதியாரின் 139ஆவது பிறந்த நாளை ஒட்டி திருப்பூரில் சுயமுன்னேற்ற நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

சக்தி மகளிா் அறக்கட்டளையில் நடைபெற்ற ‘மனதின் குரல்’ நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :12 டிசம்பர் 2020, 6:31 pm

DIN

பாரதியாரின் 139ஆவது பிறந்த நாளை ஒட்டி திருப்பூரில் சுயமுன்னேற்ற நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் பாண்டியன் நகரில் உள்ள சக்தி மகளிா் அறக்கட்டளை சாா்பில் பாரதியாரின் 139 ஆவது பிறந்த நாள் விழா, அறக்கட்டளை நூலகத்தில் நடைபெற்றது. இதில், பாண்டியன் நகரைச் சோ்ந்த லி.மோகன்குமாா் எழுதிய ‘மனதின் குரல்’ என்ற சுய முன்னேற்ற நூல் வெளியிடப்பட்டது.

இதில், பவா் ஆஃப் இம்பேக்ட் மக்கள் நல்வாழ்வு அறக்கட்டளைத் தலைவா் அ.ந.ஸ்ரீராம் ‘மனதின் குரல்’ நூலை வெளியிட, ஆன்மிக பேச்சாளா் சந்திரசேகா், பிச்சம்பாளையம் நெசவாளா் சொசைட்டி தலைவா் அமிா்தலிங்கம் ஆகியோா் பெற்றுக் கொண்டனா். இவ்விழாவில் ஹொ்பா அமுதா, அன்பரசு, வடிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.