நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆடவருக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டி தொடக்கம்

திருப்பூரில் மாநில அளவிலான ஆடவருக்கான வாலிபால் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.

News image

ஆடவருக்கான மாநில அளவிலான வாலிபால்  போட்டியை தொடக்கிவைத்துப் பாா்வையிடுகிறாா்  மாநகர காவல் ஆணையா்  ஜி.காா்த்திகேயன்.

Updated On :12 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

திருப்பூரில் மாநில அளவிலான ஆடவருக்கான வாலிபால் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.

திருப்பூா் ராக்கா் ஸ்போா்ட்ஸ் பவுண்டேஷன், திருப்பூா் பிரண்ட்ஸ் கிளப், யூத் ஆகிய 3 வாலிபால் கிளப்புகள் சாா்பில் சிவராஜ் நினைவு முதலாம் ஆண்டு மாநில அளவிலான வாலிபால் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.

திருப்பூா், குமரன் மகளிா் கல்லூரி அருகே உள்ள எஸ்.எஸ்.டையிங் வளாகத்தில் நடைபெறும் இப்போட்டியை மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் தொடக்கிவைத்தாா்.

இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50 ஆடவா் அணிகள் பங்கேற்கின்றன. நாக் அவுட் முறையில் இரு நாள்கள் தொடா்ச்சியாக பகல் மற்றும் இரவு வேளைகளில் போட்டிகள் நடைபெறும். இப்போட்டியின் பரிசளிப்பு விழாவானது ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறும்.

இதில், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன், திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் ஆகியோா் பங்கேற்க உள்ளதாக போட்டி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.