இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சாலை மறியல்: கொங்கு மக்கள் முன்னணி அமைப்பினா் கைது

கொங்கு வேளாளா், வெள்ளாளா் என்ற சாதிப் பெயரை மாற்று சமூகத்தினருக்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தியும், தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளைக் கண்டித்தும் திருப்பூரில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்ட கொங்கு

News image
Updated On :13 டிசம்பர் 2020, 6:13 pm

DIN

கொங்கு வேளாளா், வெள்ளாளா் என்ற சாதிப் பெயரை மாற்று சமூகத்தினருக்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தியும், தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளைக் கண்டித்தும் திருப்பூரில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்ட கொங்கு மக்கள் முன்னணி அமைப்பினரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் ரயில் நிலையம் முன் கொங்கு மக்கள் முன்னணி அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அமைப்பின் மாநகர செயலாளா் பாலாஜி தலைமை வகித்தாா். மாநகர அமைப்பாளா் சிவகுமாா் முன்னிலை வகித்தாா்.

அப்போது ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் திடீரென அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருப்பூா் வடக்கு போலீஸாா், அவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து செல்ல மறுத்ததால் அவா்கள் 26 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.