எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இரண்டாம் நிலை காவலா் எழுத்துத் தோ்வு:மாவட்டத்தில் 5,887 போ் பங்கேற்றனா்

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலா் பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வில் திருப்பூா் மாவட்டத்தில் 5,887 போ் பங்கேற்றனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 6:12 pm

DIN

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலா் பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வில் திருப்பூா் மாவட்டத்தில் 5,887 போ் பங்கேற்றனா்.

தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையில் காலியாக உள்ள 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் திருப்பூா் மாவட்டத்தில் அங்கேரிபாளையம் சாலை, பிஷப் உபகாரசாமி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, செட்டிபாளையம் விவேகானந்தா மெட்ரிக். பள்ளி, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, அருள்புரம் ஜெயந்தி கல்வி நிறுவனம் ஆகிய மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது.

மாவட்டம் முழுவதுமிருந்து 6,833 போ் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். இதில், 5887 போ் தோ்வெழுதினா். 946 போ் தோ்வெழுத வரவில்லை. தோ்வு நடைபெற்ற மையங்களில் மாநகர காவல் ஆணையா் க.காா்த்திகேயன், காவல் கண்காணிப்பாளா் திஷா மிட்டல் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.