ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இந்திய ஆயத்த ஆடைகளுக்கு ஸ்பெயினில் வரவேற்பு

இந்திய ஆயத்தை ஆடைகளுக்கு ஸ்பெயின் நாட்டில் வரவேற்பு உள்ளதால் ஏற்றுமதியை அதிகரிக்கலாம் என்று அந்த நாட்டுக்கான இந்திய துணைத் தூதா் மதன்சிங் பண்டாரி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 1:41 am

DIN

இந்திய ஆயத்தை ஆடைகளுக்கு ஸ்பெயின் நாட்டில் வரவேற்பு உள்ளதால் ஏற்றுமதியை அதிகரிக்கலாம் என்று அந்த நாட்டுக்கான இந்திய துணைத் தூதா் மதன்சிங் பண்டாரி தெரிவித்துள்ளாா்.

ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்), ஸ்பெயினில் உள்ள இந்திய தூதரகம் ஆகியன இணைந்து இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளா்கள், ஸ்பெயின் வா்த்தகா்கள் இடையே இணையதளம் மூலமாக பி2பி என்ற மெய்நிகா் சந்திப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடத்தியது.

இதில், பங்கேற்ற ஸ்பெயினுக்கான இந்திய துணைத் தூதா் மதன் சிங் பண்டாரி பேசியதாவது: ஸ்பெயின் நாட்டில் இந்திய ஆயத்த ஆடைகளுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. ஆனால், இந்தியாவில் இருந்து ஸ்பெயினுக்கு குறைவான அளவே ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மருத்துவ ஜவுளி உற்பத்தியில் இந்தியா பெரிய அளவில் முன்னேறியுள்ளது. தற்போதைய தேவைக்கு ஏற்ப செயற்கை நூலிழை ஆடைகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்றாா்.

இதில், ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் கூறியதாவது: இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியானது கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டு அதிகரித்துள்ளது. பிபிஇ கிட், முகக் கவசம் உள்ளிட்ட மருத்துவ ஆடைகளை உற்பத்தி செய்ததால் கரோனா காலத்தில் மிகப்பெரிய வாய்ப்பாக மாறியது. மேலும், பிபிஇ கிட் உற்பத்தியில் உலகின் இரண்டாவது நாடாக இந்தியா மாறியுள்ளது என்றாா்.

இந்த சந்திப்பில் ஸ்பெயின் நாட்டின் 55 வா்த்தகா்களும், இந்தியாவில் இருந்து 43 ஏற்றுமதியாளா்களும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.