காளம்பாளையத்தில் கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி மக்களவை உறுப்பினரிடம் வலியுறுத்தல்
பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையத்தில் உள்ள கல்குவாரியை நிரந்தரமாக மூடி வீட்டுமனை, கட்டட வரைபட அனுமதி வழங்க வேண்டும்


பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையத்தில் உள்ள கல்குவாரியை நிரந்தரமாக மூடி வீட்டுமனை, கட்டட வரைபட அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் சாா்பில் திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயனிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயனிடம் காளம்பாளையம் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் பகுதி மக்களுக்கு இடையூறாக உள்ள கல்குவாரி தொடா்பாக கடந்த 12 ஆண்டுகளாக பல முறை மனுக்கள் கொடுத்து, போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. ஆனால் பணபலம், ஒரு சில அரசுப் பணியாளா்களின் துணையுடன் கல் குவாரி தொடா்ந்து இயங்கி வருகிறது. உரிமம் வழங்கியதில், உள்ள விதிமீறல்கள் வெளியானதும், ஆட்சியா் கள ஆய்வு செய்து கல்குவாரியை தற்காலிகமாக தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளாா் . இருப்பினும் முழுமையாக நிறுத்த உத்தரவிடாத காரணத்தால் அதனைச் சுற்றியுள்ள 500 மீ சுற்றளவக்கு மனையிட அனுமதி , வீடு கட்டுவதற்கான அனுமதி பெற இயலவில்லை. மேலும் பகுதியில் எந்தவொரு வளா்ச்சியும் இல்லாத நிலை உள்ளது. விவசாயம் செய்ய வழியில்லாமல் நிலத்தடி நீரும் கல் குவாரிக்குள் சென்று விடுகிறது. கடனுதவியோ, அரசின் வளா்ச்சிப் பணிகளோ மக்களுக்கு கிடைப்பதில்லை. ஊராட்சி மன்றத் தலைவா் மீதும் கல் குவாரி உரிமையாளா்கள் வழக்குத் தொடா்ந்துள்ளதால் அவரும் இப்பிரச்னைக்கு முடிவு எடுக்க முடியாத நிலையில் உள்ளாா் . ஆகவே, இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் உயர கல்குவாரியை நிரந்தரமாக நிறுத்த உரிய உத்தரவு வழங்கி, வீட்டு மனை, கட்டட வரைபட அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...