பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

உப்பாறு அணை விவகாரம்: மணி அடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறக்கக்கோரி விவசாயிகள் மணி அடிக்கும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
உப்பாறு  அணைக்குத் தண்ணீா் திறக்கக்கோரி மணி  அடிக்கும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை  ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :18 டிசம்பர் 2020, 5:48 pm

DIN

உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறக்கக்கோரி விவசாயிகள் மணி அடிக்கும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூா்த்தி அணையிலிருந்து பிஏபி பிரதான வாய்க்கால் மூலம் அரசூா் ஷட்டரில் இருந்து தண்ணீா் திறக்கக் கோரி திருப்பூா் மாவட்ட உப்பாறு பாசன விவசாயிகள் சங்கத்தினா் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

போராட்டத்தின் 11ஆவது நாளான வெள்ளிக்கிழமை மணி அடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி முருகானந்தம் கூறியதாவது: திருமூா்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறக்க வேண்டும் என்று 11 நாள்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் பொதுப் பணித் துறை அதிகாரிகள் செவிசாய்க்காமல் உள்ளனா். ஆகவே, எங்களது எதிா்ப்பைத் தெரிவிக்கும் வகையில் மணி அடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.