

சேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் முதற்கட்டமாக 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சனிக்கிழமை முதல் பயன்பாடிற்கு திறக்கப்பட்டன.
திருப்பூர் மாவட்டம், சேவூர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள், வணிக நிறுவனத்தினர், சேவூர் ரோட்டரி சங்கத்தினர் உள்ளிட்டோர் பங்களிப்புடன் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்றது.
இதில் முதற்கட்டமாக சேவூர் காவல் நிலைய பேருந்து நிறுத்தம், வடக்கு வீதி, கைகாட்டி ரவுண்டானா, கோபி சாலை, புளியம்பட்டி சாலை, அவிநாசி சாலை, கூட்டுறவு வங்கி நான்கு முனை சந்திப்பு சாலை உள்ளிட்ட இடங்களில் ரூ.5 லட்சம் மதிப்பில் 16 சிசிடிவி கேமராங்கள் பொருத்தப்பட்டது. இதையடுத்து, பயன்பாட்டிற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி சேவூர் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அவிநாசி காவல் துணைக் கண்காணிப்பாளர் எல்.பாஸ்கர் தலைமை வகித்தார். அவிநாசி ஒன்றிய குழுத் தலைவர் அ.ஜெகதீசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சேவூர் ஜி.வேலுசாமி ஆகியோர் சிசிடிவி கேமராக்களை பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, நன்கொடையாளர்களை கௌரவித்தார்.
மேலும் சேவூர் காவல் எல்லை ஆலத்தூர் சோதனை சாவடியில் பொருத்துவதற்காக, ரோட்டரி சங்கத்தினர் 4 சிசிடிவி கேமராக்கள் மற்றும் உபகரணங்களை வழங்கினர். முறியாண்டம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ப.ரவிக்குமார்,
உதவி ஆய்வாளர்கள் அன்பரசு, செல்வராஜ், தனிப்பிரிவு காவலர் வெள்ளியங்கிரி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்துச்சாமி, நாகராஜ், ரத்தினம், பைஜர்ரகுமான், பொதுமக்கள், வணிக நிறுவனத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.