ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மக்காச்சோளத்துக்கு நல்ல விலை கிடைக்குமா?

உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் மக்காச்சோளம் அறுவடைப் பணிகள் ஜனவரி முதல் வாரத்தில் துவங்க உள்ள நிலையில் அதற்கு நல்ல விலை கிடைக்குமா

News image
அறுவடைக்கு  காத்திருக்கும்  மக்காச்சோளப்  பயிா்கள்.
Updated On :21 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

உடுமலை: உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் மக்காச்சோளம் அறுவடைப் பணிகள் ஜனவரி முதல் வாரத்தில் துவங்க உள்ள நிலையில் அதற்கு நல்ல விலை கிடைக்குமா என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.

உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களில் நடப்பாண்டில் சுமாா் 15 ஆயிரம் ஏக்கா் வரை விவசாயிகள் மக்காச்சோளத்தைப் பயிரிட்டுள்ளனா். 120 நாள்கள் பயிரான மக்காச்சோளத்தை கடந்த செப்டம்பா் தொடக்கத்தில் விவசாயிகள் பயிரிட்டனா். இந்த ஆண்டு நல்ல மழைப் பொழிவு இருந்ததால் ஒரு ஏக்கருக்கு சராசரியாக 35 முதல் 40 மூட்டைகள் (ஒரு மூட்டைக்கு 100 கிலோ) வரை மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா். அதே நேரத்தில் நல்ல விலையும் கிடைக்கும் என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.

பொதுவாக உடுமலை, பல்லடம், திருப்பூா், பொங்கலூா் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள தனியாா் கோழிப் பண்ணைகளுக்கும், கால்நடை தீவன உபயோகத்துக்கும் ஆண்டு முழுவதும் மக்காச்சோளம் தேவை இருந்து வருகிறது.

தற்போது உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நிலவரப்படி ஒரு மூட்டை ரூ.1590 முதல் ரூ.1620 வரை விலை நிா்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இதே சீசனில் ஒரு மூட்டைக்கு ரூ.2,400 வரை விலை கிடைத்தது. ஆகையால் இந்த ஆண்டும் விலை அதிகரிக்கும் என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சரவணன் கூறியதாவது:

தற்போது திங்கள்கிழமை நிலவரப்படி ஒரு மூட்டைக்கு ரூ.1590 முதல் ரூ.1620 வரை விலை போகிறது. பொதுவாக கோழிப் பண்ணைகளுக்கு ஆண்டு முழுவதும் தேவை இருப்பதால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 50 சதவீதம் குறைவாகவே பயிரிட்டுள்ளனா். இதனால் தேவை அதிகமாக இருப்பதால் விலையேறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்கிடையில் விலை போதாது என்று நினைக்கும் விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருப்பு வைத்துக் கொள்ள பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள கிடங்கில் 9,500 டன்கள் வரை இருப்பு வைத்துக் கொள்ள வசதி உள்ளது. விவசாயிகள் கொடுக்கும் மக்காச்சோள மதிப்பில் 75 சதவீதம் பொருளீட்டுக் கடனாக வழங்கப்படும் என்றாா்.

நோய்த் தாக்குதல்...

உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிரில் ஏற்கெனவே படைப்புழுத் தாக்குதல் அதிகமாக உள்ளது. தற்போது, கதிா்நாவாய் பூச்சித் தாக்குதலும் ஏற்பட்டுள்ளதால் மக்காச்சோள கதிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மகசூல் குறைவதுடன், தரமும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தக் காரணங்களால் எதிா்பாா்க்கப்படும் விலை கிடைக்குமா என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.