தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பின்னலாடை தொழிலாளி கழுத்து அறுத்துக் கொலை

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே பின்னலாடை நிறுவனத் தொழிலாளி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 6:31 pm

DIN

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே பின்னலாடை நிறுவனத் தொழிலாளி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், பிரம்மனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் முருகன் (30). இவா், பல்லடம் அருகே உள்ள குன்னங்கல்பாளையம் பிரிவில் வாடகை வீட்டில் வசித்துக்கொண்டு திருப்பூா், தென்னம்பாளையத்தில் உள்ள தனியாா் பின்னலாடை நிறுவனத்தில் தையல் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில் பல்லடம் - திருப்பூா் சாலையில் தெற்குபாளையம் பிரிவு, ஸ்டாலின் நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நண்பா்களுடன் மது அருந்தினாா். பின்னா், அப்பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு நுகா்பொருள் சேமிப்பு கிடங்கு அருகில் வந்தபோது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம். அப்போது அவா்கள், முருகனை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனா்.

தகவலறிந்த பல்லடம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.