ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மூலனூரில் இந்திய பருத்திக் கழகம் கொள்முதலால் பருத்தி விலை உயர்வு

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூரில் இந்திய பருத்திக் கழகம் கொள்முதல் செய்ததால் பருத்தி விலை உயர்ந்தது. 

News image
Updated On :10 ஜூலை 2020, 1:07 pm

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூரில் இந்திய பருத்திக் கழகம் கொள்முதல் செய்ததால் பருத்தி விலை உயர்ந்தது.

திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் தமிழகத்திலேயே பருத்தி அதிகளவு விற்பனை நடைபெறும் இடமாகும். இங்கு வாரந்தோறும் வியாழன், வெள்ளிக்கிழமை மறைமுக ஏலம் நடைபெறுகிறது. இந்த வாரம் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களில் இருந்து 330 விவசாயிகள் தங்களுடைய பருத்தி மூட்டைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனர். 

மத்திய அரசின் இந்திய பருத்திக் கழகம் முதன் முதலாக இந்த விற்பனைக் கூட ஏலத்தில் கலந்து கொண்டது. குவிண்டால் ரூ.5,278 - ரூ.5,500 வரை 540 குவிண்டால் பருத்திக் கழகத்தால் வாங்கப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 20 வியாபாரிகள் 748 குவிண்டால் பருத்திகளை குவிண்டால் ரூ.3,069 - ரூ.4,400 விலைக்கு வாங்கினர். 

ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.55.23 லட்சம் விற்பனைக் கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் முன்னிலையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. மத்திய அரசின் ஆதார விலையின் அடிப்படையில் பருத்திக் கழகம் கொள்முதல் செய்ததால் விவசாயிகளுக்கு உயர்ந்த விலை கிடைத்ததாக திருப்பூர் மாவட்ட விற்பனைக் குழு முதுநிலைச் செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.