முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வெள்ளக்கோவில் அருகே ஃபேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச படங்கள் பதிவு  - காவல்துறையினர் வலை வீச்சு

ஃபேஸ்புக், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பெண் குழந்தைகள், சிறுமிகளின் படங்களை பதிவேற்றம் செய்வதும், அவற்றைப் பார்ப்பதும் தமிழகத்தில் அதிகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

News image
Updated On :14 ஜூலை 2020, 6:09 am

DIN

ஃபேஸ்புக், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பெண் குழந்தைகள், சிறுமிகளின் படங்களை பதிவேற்றம் செய்வதும், அவற்றைப் பார்ப்பதும் தமிழகத்தில் அதிகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

போலி அடையாளத்துடன் சமூக வலைத்தள கணக்குகளை உருவாக்கி, அவற்றின் மூலம் பெண் குழந்தைகள், பெண்களை மோசமாமாகச் சித்தரிக்கும் ஆபாச படங்கள், வீடியோக்கள் பதிவு செய்யப்படுகின்றன. இவற்றைப் பார்ப்பதால் சமூகத்தில் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் வெள்ளக்கோவில் - காங்கயம் சாலை ஓலப்பாளையம் பகுதியில் ஏதோ ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் ஃபேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாசப் படங்களைப் பதிவேற்றம் செய்துள்ளார். இது குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர், வெள்ளக்கோவில் காவல் நிலையத்துக்கு கொடுத்த தகவலின் பேரில், போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப முறைகேடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மர்ம நபரின் அலைபேசி எண் கிடைக்கவில்லை. ஃபேஸ்புக் முகவரியும் போலியாக உள்ளது. கிடைத்த சில ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜென்ஸ் நுண்ணறிவுத் தகவலின் பேரில் மர்ம நபரை விரைவில் மடக்கி விடுவோம் என காவல்துறையினர் தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் இது இரண்டாவது வழக்காகும். முதல் வழக்கு ஊத்துக்குளியில் போடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.