மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திருப்பூரில் மார்க்சிஸ்ட் சார்பில் எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் அகில இந்திய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜூன் 2020, 7:32 am

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் அகில இந்திய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அகில இந்திய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதன்படி திருப்பூர் அரிசிக் கடை வீதியில் இந்திய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7,500, மாநில அரசு ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும். 

குளறுபடியான மின் கட்டணத்தை ரத்து செய்து, மாதந்திர கணக்கீடு அடிப்படையில் கட்டணம் வசூலிக்க வேண்டும். கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுசுகாதாரம், மருத்துவப் பணிகளை அதிகரிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும். நுண்நிதி நிறுவனங்களின் அத்துமீறலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.தங்கவேல், மாவட்டச் செயலாளர் முத்துகண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால், தெற்கு மாநகர செயலாளர் டி.ஜெயபால், தெற்கு மாநகரக் குழு உறுப்பினர் பி.பாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.