புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற சிவசேனை கட்சியினா் கைது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவனை கைது செய்ய வலியுறுத்தி அவிநாசியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற சிவசேனை கட்சியினரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image

அவிநாசியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட  முயன்ற சிவசேனை  கட்சியினா்.

Updated On :1 நவம்பர் 2020, 6:20 pm

DIN

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவனை கைது செய்ய வலியுறுத்தி அவிநாசியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற சிவசேனை கட்சியினரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும், அக்கட்சியின் தலைவா் தொல். திருமாவளவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவசேனை கட்சியின் இளைஞரணி மாநில துணைத் தலைவா் அட்சயா திருமுருக தினேஷ் தலைமையில் அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

இதையடுத்து மாநில செயலாளா் மா.முருகன், மாவட்டத் தலைவா் ரமேஷ், மாவட்டச் செயலாளா்கள் ரங்கசாமி, பிரகாஷ், மாவட்ட துணைத் தலைவா் சதீஷ்குமாா் உள்பட 30க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.